சேவையை ஆற்ற எடுக்கும் காலம்:-
(சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை) : 30 நிமிடங்களிலிருந்து, 01 மணித்தியாலம் வரைக்கும்.
ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கான பொதுவான குறிப்புக்கள்:-
1. ஆவணங்கள் உறுதிப்படுத்தும் பிரிவானது, திங்கட்கிழமை தொடக்கம், வெள்ளிக்கிழமை வரை திறந்திருக்கும். (பகிரங்க விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்)
2. விண்ணப்பப் படிவங்கள், காவற்றூது, விநியோக கரும பீடத்தில், முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கட்டிடத்தின், 5 ஆம் மாடியில், மு.ப 06.00 மணியிலிருந்து பி.ப 13.00 மணி வரை விநியோகிக்கப்படும். அத்தாட்சிப்படுத்துவதற்காக, மு.ப 07.30 மணியிலிருந்து பி.ப 13.00 மணி வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.
3. அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மு.ப 08.30 மணியிலிருந்து, அவ்வப்போது குறி எண், கூப்பிடப்பட்டு, விண்ணப்பதார்களுக்கு கையளிக்கப்படும்.
4.விண்ணப்பதாரரால், சான்றுறுதிப்படுத்திய ஆவணங்கள், காவற்தூதர் பிரிவிற்கு கையளிக்கப்படும்.
விண்ணப்பதாரி வெளிநாட்டில் வசித்து வந்தால், அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம், குறிப்பிடப்பட்டதுமான ஒரு அதிகாரமளிக்கும் கடிதம், விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டின் இயைபுடைய பக்கத்தின், பிரதியை கொண்டு வரும் ஒரு நபரை இவர் அதிகாரமளிக்கலாம்.
5.சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் மற்றும் அராபிய மொழிபெயர்ப்பிலான ஆவணங்கள் மாத்திரம் அத்தாட்சிப்படுத்தப்படும்.
6. மொழி பெயர்க்கப்பட்ட ஆவணமொன்று, உத்தரவு பெற்ற மொழிபெயர்ப்பாளரினால், மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் மாத்திரம், அவரது கடித தலைப்பில், /அல்லது இலச்சனை/ முத்திரையில் அவர் எம்மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு அதிகாரம் பெற்றார் என்பதினை தெளிவாக குறிப்பிட்டிருத்தல் வேண்டும். சிங்களம், தமிழ்/ அல்லது ஆங்கில மொழியில் உள்ள ஆவணங்கள், அராபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமிடத்து, அந்த ஆவணத்தில், ஆவணத்தின் மூலப் பிரதியிலுள்ள விபரங்கள், ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
7. காவற்தூதர் பிரிவானது, அவசியம் ஏற்படின், ஒரு ஆவணத்தின் உண்மைத் தன்மையையிட்டு உறுதிப்படுத்துவதற்கு இயைபுடைய அதிகாரிக்கு அவற்றை அனுப்பிவைக்கும். இச் செயற்பாடானது கிட்டத்தட்ட மூன்று கிழமைகள் எடுக்கும், மற்றும் நிலைமைகளையிட்டு, காவற்தூதர் பிரிவினரால் விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.
இலங்கையில், நீதிமன்றம் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட்ட ஆவணங்கள், இயபுடைய நீதிமன்றத்தின் பதிவாளரினால், ஏற்புறுதி செய்யப்பட்டு, கிடைக்கப்பட்டதின் பின்னர், அவை அத்தாட்சிப்படுத்தப்படும் என்பதுடன் இதற்கு 3 தொடக்கம் 04 கிழமைகள் எடுக்கலாம். காவற்தூதர் பிரிவானது, இந்த நிலையையிட்டு விண்ணப்பதாரிக்கு அறிவிக்கும்.
ஆவணங்கள் அத்தாட்சிப்படுத்துவதற்கு தேவைப்படுவன
|