தகுதி
1. எலும்புருக்கி நோய், புற்றுநோய், தொழுநோய், தலசமியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள்.
2. மிகக்குறைந்த வருமானம் உள்ள ஏழை மக்கள்.
சமர்ப்பிக்கும் முறைகள்
கிராம சேவகரை பார்வையிட்டு விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
- விண்ணப்பதாரர் நோய்வாய்பட்டவர்களுக்கான உதவியை
வேண்டுவதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் வேண்டுகோள்
கடிதத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு : விண்ணப்பதாரர் இந்த சேவையை நேரடியாக கோட்ட செயலகத்திடமிருந்து (நிறுவனப் பிரிவு) பெற்றுக் கொள்ளலாம்.
- நோய்வாய்பட்டவர்களுக்கான உதவிக்கான கிராம சேவகரின்
ஒப்புதலைப் பெற விண்ணப்பதாரர் கிராம சேவகரால்
வழங்கப்பட்ட “SS/TB/3” படிவத்தைப் பெற வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வேண்டுகோள் கடிதம்
• அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ்.
குறிப்பு :
1. நோயினால் பாதிக்கப்பட்ட காலத்தை மருத்துவ அதிகாரி மருத்துவ அறிக்கையில்
தெரியப்படுத்த வேண்டும்.
2. தொழுநோயாளியாக இருப்பின், அவ்வறிக்கை தொழுநோய் எதிர்ப்பு முகாமிலிருந்து இருக்க
வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை சமர்பித்தல்
•விண்ணப்பதாரர் “SS / TB/3” பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் சமாப்பிக்க வேண்டும்.
•கிராம சேவகர் அவருடைய பரிந்துரை மற்றும் விண்ணப்பபடிவத்துடன் கூடிய மருத்துவ அறிக்கையையும் கோட்ட செயலக அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
வேண்டுகோள் கடிதம்
விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர்
விவரம்
வேண்டுகோள் கடிதம்”
உடல் நலமின்மைக்காக வழங்கப்படும் சேவையை வேண்டி அதற்கான காரணத்தை அறிவிக்க வேண்டும்
விண்ணப்பதாரர் பூர்த்தி செய்து நேரடியாக கிராம சேவகர் அல்லது கோட்ட செயலக அலுவலகத்தில் (நிறுவனப்பிரிவு) சமர்ப்பிக்க வேண்டும்.
படிப்படியான வழிமுறைகள் (உடல்நலமின்மைக்கான உதவி)
படி 1 : விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கிராம சேவகர் அல்லது கோட்ட செயலக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
படி 2 : கிராம சேவகர் அல்லது கோட்ட செயலக அலுவலகம் வெளியிட்ட “SS/TB/3” விண்ணப்பபடிவத்தை விண்ணப்பதாரர் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
படி 3 : விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்துடன் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையிலிருந்து பெற்ற மருத்துவ அறிக்கையையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்
குறிப்பு :
1. மருத்துவ அலுவலர் மருத்துவ அறிக்கையில் நோய்க்கான காலத்தை குறிப்பிட வேண்டும்.
2. இந்த காலம் புற்றுநோய்க்கான சேவைக்கு பொருந்தாது
3. தொழுநோயாக இருப்பின், தொழுநோய் எதிர்ப்பு முகாமிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையாக இருக்க வேண்டும்.
படி 4 : கிராம சேவகர் விண்ணப்பத்திற்காக பரிந்துரை செய்து மருத்துவ அறி;க்கை மற்றும் வேண்டுகோள் கடிதம், விண்ணப்பம் ஆகியவற்றை கோட்ட செயலகத்திடம் (நிறுவன பிரிவு) ஒப்படைப்பார்
குறிப்பு : விண்ணப்பதாரர் அவன்/அவள் விண்ணப்பத்தை நேரடியாக கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்ப்பித்தால், மேலே கூறியவற்றை பின்பற்ற தேவையில்லை.
படி 5 : கோட்டசெயலகத்தின் ஒப்புதலுக்காக சமூக சேவை அலுவலர்கள் விசாரித்து விண்ணப்பத்திற்காக பரிந்துரை செய்கின்றனர், அதன் பின் விண்ணப்பதாரர் பொது சேவை அட்டை(சான்றிதலுக்கான தொகை)யை சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடமிருந்து பெற வேண்டும்
படி 6: உடல்நலமின்மைக்கான சேவை நிதி அருகில் உள்ள அஞ்சல் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரர் மூலம் பெற்றுக் கொள்ளப் படுகிறது.
குறிப்பு 1 : சேவையை பெறுபவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், கிராம சேவகத்தாரிடம் தெரியப்படுத்தி அவன்/அவளுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியை பெறுகிறார்.
அதற்குப்பிறகு பிரதிநிதி கோட்டச் செயலகத்திலிருந்து சேகரித்த அனுமதி பத்திரம் “SS/P/4” ஐ நிரப்புதல், மற்றும் கிராம சேவகரால் சரிபார்க்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட படிவத்தை பெறுதல். இதன் மூலம் பிரதிநிதி நோய்வாய்பட்டவற்கான நிதியை தபால் நிலையத்திலிருந்து பெற முடியும்.
குறிப்பு 2 : அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 6 மற்றும் 13க்குள் பொது சேவையை பெற்றுக்கொள்ளாலம்.
குறிப்பு 3 : குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிதி பெறவில்லை எனில், விண்ணப்பதாரர் நிலுவை பெறமுடியாது
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
படி ஏற்பாடு செய்தல் (கோட்ட செயலக அலுவலகம்) : ஒரு மாதத்திற்குள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரத்தில்
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
ஒரு மாதத்திற்குள்
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு):
மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 4.30 மணி வரை
திங்கள் கிழமை மற்றும் புதன் கிழமை
கிராம சேவகர் அலுவலகம்:
மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 4.45 மணி வரை
திங்கள் கிழமை
மு.ப9.00மணி முதல் – நண்பகல் 12.00மணி வரை
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
இந்தச் சேவைக்கு எந்த செலவினமும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வேண்டுக்கோள் கடிதம்
• சம்மந்தப்பட்ட அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ்.
குறிப்பு:
1. நோயினால் பாதிக்கப்பட்ட காலத்தை, மருத்துவ அதிகாரி மருத்துவ அறிக்கையில் தெரியப்படுத்த வேண்டும்.
2. தொழு நோயாளியாக இருப்பின், தொழுநோய் எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து அறிக்கை பெறுதல் அவசியம்.
சிறப்பு வகையறைகள்
சேவையைப் பெறுபவர்; உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், அவன்/அவள் கிராம சேவகத்தாரிடம் தகவலை தெரியப்படுத்த வேண்டும் மற்றும் அவன்/அவளுக்கு பதிலாக ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடு;க்க வேண்டும்.
அதற்குப்பிறகு, பிரதிநிதி கோட்ட செயலரால் சேகரிக்கப்பட்ட அனுமதிப்படிவத்தை எண் “SS/P/4” பூர்த்தி செய்;ய வேண்டும் மற்றும் அந்த படிவத்தை கிராம சேவகரால் சரிபார்த்தல் மற்றும் சான்றிதழித்தல், அதன் விளைவாக பிரதிநிதி பொது நிதிஉதவியை அஞ்சல் அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தை கொடுத்தல்.
பொது உதவியின் தற்காலிக நிறுத்தம் மற்றும் நீக்கம்
• விண்ணப்பதாரரின் இறப்பிற்கு பின,; கோட்டச் செயலகம் நிதியியை ரத்து செய்துவிடும்.
• வரவேற்பாளர் பொது உதவியை தொடர்ச்சியாக 3 மாதங்கள் பெறாமல் இருந்தால் அதன் விளைவாக நீக்கம் செய்யப்படும். நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 மாதத்திற்குள்ளாக வேண்டுகோள் விடுக்கவில்லையெனில் பொது உதவி நிறுத்தி வைக்கப்படும்.
• பொது உதவிநிதி பெறும் குடும்பம் தனது பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் பெற்றிருந்தால், பிறகு பொது உதவி சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது.
• வசிக்கம் இருப்பீடத்தை மாற்றுதல்.
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
இந்தச் சேவையானது பொதுவான அரசாங்கத் தகவலைக் கோரும் GIC வாடிக்கையாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது,
எனவே எங்களிடம் உள்ள ஆதாரங்களில் இருந்து தேவையான தகவல்களை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,
எனவே எங்களிடம் உள்ள தகவல்களுடன் சிறந்த சேவைகளை உங்களுக்கு வழங்குவோம். சிங்களம் மற்றும் தமிழில் (யூனிகோட்)
பரிவர்த்தனை செய்யும் போது எழுத்துப் பிழைகள் இருக்கும், எனவே எழுத்துப்பிழை அல்லது இலக்கணப் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
This service is dedicated for GIC customers who are requesting for general government information,
thus we are obliged to provide you with the required information from the resources we have, thus we will
provide you the best of our services with the information we have at hand, when transacting in Sinhala &
Tamil (unicode) there would be typo errors, therefore we humbly apologize if there is a spelling or grammatical error.