The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை கணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டம்
கேள்வி விடை வகை முழு விபரம்

கணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டத்தை கையாளுதல்

PDF Print Email

  தகுதி

                அரசாங்க வேலையாள் தாங்கள் பணியில் இருக்கும் பொழுது விதவைஃமனைவியை இழந்தவர் மற்றும் அனாதைகளுக்கான ஒய்வூதிய திட்டத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.

                விதவை / மனைவியை இழந்தவர் ஒய்வூதியதாரர் இறக்கும் வரைக்கும் சட்டப்படி திருமணம் செய்திருக்க வேண்டும்.

குறப்பு: தகுதியின்மைக்கான வரையறை

 

விதவை அல்லது மனைவியை இழந்தவர் மீண்டும் திருமணம் செய்ய விரும்பினால் இவர் ஒய்வூதியத்தை பெறுவதற்கான உரிமை இல்லை. திருமண சான்றிதழ், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்/வாக்காளர் பட்டியல் அல்லது மற்ற ஆதாரங்களின் பிரதிகளில் தவறு ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் ஒய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.

 

சமர்பிக்கும் முறைகள்

 விண்ணப்ப படிவத்தை பெறுதல்

 

-               விதவைஃமனைவியை இழந்தவர் இறப்பை கோட்ட செயலகத்திற்கு தெரிவிக்கவும்.

 

விதவைஃமனைவியை இழந்தவர், விதவைஃமனைவியை இழந்தவர்களுக்கான அறிக்கை படிவத்தை பெற்று அவற்றின் பொருத்தமான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்

 

குறிப்பு: விதவைஃமனைவியை இழந்தவர்களுக்கான அறிக்கையை கிராம சேவகரால் சான்றளிக்கப்பட வேண்டும்      

 

விண்ணப்ப படிவம்

(F* S., T. & E.) 8/78 – விதவை மற்றும் அனாதைகளுக்கான ஒய்வூதிய திட்டம்

 

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

-               செல்லத்தக்க திருமண சான்றிதழ்

-               ஒய்வூதியதாரரின் இறப்பு சான்று

-               ஒய்வூதியதாரர் ஏற்கனவே திருமணம் ஆனவரானால் விவாகரத்து சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். விவாகரத்து மனைவியோ அல்லது கணவனோ இறந்து போயிருந்தால் பொருத்தமான இறப்பு சான்றிதழ்களை கொடுக்க வேண்டும்.

-               விதவைஃமனைவியை இழந்தவர் ஏற்கனவே திருமணம் ஆனவரானால் விவாகரத்து சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். விவாகரத்து மனைவியோ அல்லது கணவனோ இறந்து போயிருந்தால் பொருத்தமான இறப்பு சான்றிதழ்களை கொடுக்க வேண்டும.

விதவைஃமனைவியை இழந்தவா மற்றும் குழந்தைகள் உடைய பிறப்பு சான்றிதழ்கள்

 

விண்ணப்ப படிவத்தை சமர்பித்தல்

 

-               விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தோடு கடவுச்சீட்டு அளவிலான புதிய 3 புகைப்படத்தையும் சேர்த்து ஒய்வூதிய பிரிவிற்கு (கோட்ட செயலகம்) சமர்பிக்க வேண்டும்.

               

வேலை நேரங்கள்

திங்கட்கிழமை ரூ புதன்கிழமை

 

வேலை நேரங்கள்
மு.ப9.00 மணி முதல் பி.ப4.30மணி வரை

 

குறிப்பு:

-               ஒய்வு பெற்ற நபர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு நேரில் செல்ல முடியாமல் இருந்தால் அவர் தன்னுடைய அடையாளத்தை உறுதி செயததை குறிப்பிட்டு அனுப்புவதற்கு தேவையான கடிதத்தை கோட்ட செயலக அலுவலத்தில் ஒப்படைக்க வேண்டும்.

 

விண்ணப்பபடிவங்கள

Application form Number / Name
Description
(F* S., T. & E.) 8/78 – Widows’ and Orphans’ Pension Scheme Widows Statement regarding the registration of obtaining the pension payment.
Orp 5/1 - Payment of Pensions for Orphans between ages 21 -26 To obtain Father’s pension
Orp 5/2 - Payment of Pensions for Orphans between ages 21 -26 To obtain Mother’s pension
Orp 7 – Declaration form for Cancellation To declare If and when an orphan seizes education or seeks employment
(2F 6 S.T. & E.) 3/91 - Widows’ and Orphans’ Pension Scheme Receipt To obtain monthly pension payment

  படிப்படியான வழிமுறைகள் (விதவைகள்/மனைவியை இழந்தவர்கள் மற்றும் அனாதைகளுக்கான ஒய்வூதிய திட்டத்தை கையாளுதல்)

 படி 1:  விதவைஃமனைவியை இழந்தவர் கோட்டசெயலகத்திற்கு இறப்பை தெரிவித்தல்.

படி 2:  விதவைஃமனைவியை இழந்தவர், விதவைஃமனைவியை இழந்தவர்களுக்கான அறிக்கை படிவத்தை பெற்று அவற்றின் பொருத்தமான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்

   குறிப்பு: விதவைஃமனைவியை இழந்தவர்களுக்கான அறிக்கையை கிராம சேவகரால் சான்றளிக்கப்பட வேண்டும்

 

படி 3 :  விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தோடு கடவுச்சீட்டு அளவிலான புதிய மூன்று புகைப்படத்தையும் சேர்த்து ஒய்வூதிய பிரிவிற்கு சமர்பிக்க வேண்டும

படி 4 கோட்ட செயலகம் அடையாள அட்டையை தயார் செய்து விதவைஃமனைவியை இழந்தவருக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

படி 5 :கோட்ட செயலகம் பொருத்தமான ஆவணங்களை சரிபார்க்கும் நோக்கத்திற்காக அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பும்.

படி 6 விதவைஃமனைவியை இழந்தவர் ஒய்வூதியத்தை அவர் கேட்டுகொண்ட விருப்பபட்ட இடத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

 

 குறிப்பு 1:

விதவைஃமனைவியை இழந்தவர் வங்கிக்கான இருப்பிடத்தை குறிப்பிட்டிருந்தால் கோட்ட அலுவலகத்திடமிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஓய்வூதிய இரசீதை ஓய்வூதியத்தை பெறும் பொழுது தாக்கல் செய்ய வேண்டிருக்கும்.

  

குறிப்பு 2:

விதவைஃமனைவியை இழந்தவர் தபால் அலுவலகத்தை குறிப்பிட்டிருந்தால் அவர் ஓய்வூதிய அடையாள அட்டையை ஓய்வூதியத்தை பெறும் பொழுது தாக்கல் செய்ய வேண்டிருக்கும.

 

குறிப்பு 3:

விதவைஃமனைவியை இழந்தவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பெற்றிருந்தால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்காக உதவிதொகையை பெறுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

 

 

குறிப்பு 4:

விதவைஃமனைவியை இழந்தவர் மறுமணம் செய்தால் அவர்கள் கோட்ட செயலத்தில் கூறவேண்டும். விதவைஃமனைவியை இழந்தவர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திலிருந்து வழங்கல் படிவத்தை பெற்று அமைதிக்கான நீதிமானிடமிருந்து சான்று அளிக்க வேண்டும். விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மற்றும் சான்று அளிக்கப்பட்டு கோட்ட செயலகத்திடம் சமர்பிக்க வேண்டும்.

 

குறிப்பு 5:

பணிகாலத்தில் பொழுது ஒருவர் உயிரிழந்து ஒய்வூதிய திட்டத்திற்கு பதிவுசெய்திருந்தால , இறந்தவருடைய விதவைஃமனைவியை இழந்தவர் மற்றும் குழந்தைகள் இரண்டு வருட ஊதியத்தில் 90மூ பணிகொடையாக பெறலாம்.(இந்த செலுத்தல் தொகை மாதாந்திர ஒய்வூதிய செலுத்தல் தொகையிலிருந்து கழிக்கப்படமாட்டாது)

 

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

                ஒரு வாரத்திற்குள்     

 

குறிப்பு : ஒய்வூதியத்தை முந்தைய மாதத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்

 

சமர்பிக்க வேண்டிய காலக்கோடு

கோட்ட செயலகத்தின் எந்த வேலை நேரங்களின் பொழுது

 

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு

30 நாட்கள்

 

வேலை நேரங்கள் / நாட்கள்

கோட்ட செயலக அலுவலகம் (ஒய்வூதியம் பிரிவு):     மு.ப9.00மணி முதல் பி.ப 4.30மணி வரை

திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை

 

 

சேவையின் தொடர்பான கட்டணங்கள்

மாதஒய்வூதியம் ரூ.100 அதிகமாக இருக்கும் பொழுது, குடியுரிமை ஒய்வூதிய இரசீதின் மீது முத்திரையிட்டிருக்க வேண்டும் மற்றும் முத்திரையின் மீது கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

 


தேவையான இனைப்பு ஆவணங்கள்

 

-               ஏற்றுக்கொள்ளக்கூடிய திருமண சான்றிதழ்

-               ஓய்வூதியரின் இறப்பு சான்றிதழ்

-               ஓய்வூதியர் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால் விவாகரத்து சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விவாகரத்தான கணவர் / மனைவி இறந்திருந்தால் சம்பந்தப்பட்ட இறப்பு சான்றிதழ் தரப்பட்டிருக்க வேண்டும்.

 

-               விதவை அல்லது கணவரை இழந்தவர் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால் விவாகரத்து சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விவாகரத்தான கணவர் / மனைவி இறந்திருந்தால் சம்பந்தப்பட்ட இறப்பு சான்றிதழ் தரப்பட்டிருக்க வேண்டும்.

 

-               விதவை அல்லது கணவரை இழந்தவர்களுடைய குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்

 

 

சிறப்பு வகையறைகள்

 

வயதுக்கும் குறைவான அனாதைகளுக்கு ஓய்வூதியத் தொகை

 

21 வயதுக்கும் குறைவான அனாதைகளுக்கு பாதுகாவலர் இருக்க வேண்டும். குழந்தையை பராமரிக்கும் பாதுகாவலருக்கு குறிப்பிட்ட பகுதியில்;; இருந்து ஓய்வூதியத் தொகையை பாதுகாவலர் பெறுவார். மீதமுள்ள பகுதியை அனாதைகளுக்கான வங்கிக் கணக்கில் பற்று வைக்கப்படும். 18 வயதுத்திற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வங்கி கணக்கில் இருந்து தொகையை சரியான வகையில் அனாதைகள் பயன்பெற முடியும்.

 

குறிப்பு 1:

வங்கிக் கணக்கில் பகுதியில் இருக்கும் ஓய்வூதியத் தொகையை ஓய்வூதிய திணைக்களம் தீர்மானிக்கும்.

 

 

குறிப்பு 2:

இந்த பயன்பாட்டிற்கான வங்கிக் கணக்கு தேசிய சேமிப்பு வங்கியால் மட்டுமே பராமரிக்கப்படும்.

 

குறிப்பு 3:

பெண் அனாதைகள் 21 வயது பூர்த்தி ஆவதற்குள் திருமணம் செய்திருந்தால், ஓய்வூதியத்தைப் பெறும் உரிமையை இழக்கிறார். இந்த சம்பவமானது சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு பாதுகாவலர் மூலம் தெரிக்கவிக்கப்பட வேண்டும்.

 

குறிப்பு 4:

அனாதைகள் 21 வயது பூர்த்தி ஆவதற்குள் வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், ஓய்வூதியத்தைப் பெறும் உரிமையை இழக்கிறார். இந்த சம்பவமானது சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு பாதுகாவலர் மூலம் தெரிக்கவிக்கப்பட வேண்டும்..

 

 

குறிப்பு 5: ஓய்வூதியத்திட்டத்தில் பதிவு செய்திருக்கும் நபர் பணியில் இருக்கும் போது இறந்திருந்தால் இறந்த நபருடைய அனாதையான குழந்தைகள் அவருடைய இரண்டு வருட சம்பளத்திலிருந்து 90மூ  தொகையைப் பணிக்கொடையாக பெறுகின்றனர். (இந்த தொகையானது மாதந்திர தொகையிலிருந்து கழிக்கப்பட மாட்டாது).

 

 

2. பெற்றோரை இழந்த 21 -26 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்

 

 

கல்விக்கு பின் பணியில்லாமல் இருக்கும் பெற்றோரை இழந்தவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும். பெற்றோரை இழந்தவர் ஓய்வூதியம் பெறுவற்கான தகுதி ஆதாரங்கள் கோட்ட செயலகத்தின் மூலம் கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

குறிப்பு 1:

பெற்றோரை இழந்தவர் அவருக்கு 21 வயது பூர்த்தி அடைந்த பின் கோட்ட செயலகத்திற்கு சென்று ஓய்வூதிய நீட்டிப்பு படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்தல் வேண்டும்.

குறிப்பு 2:

கோட்ட செயலகம் 3 புதிய பாஸ்போர்ட் அளவு நிழற்படத்தை தந்தவுடன் கோட்ட செயலகம் ஒரு புதிய ஓய்வூதிய அடையான அட்டையை வழங்கும்.

பெற்றோரை இழந்தவர் படித்து கொண்டிருந்தாலோ அல்லது பணியைத் தேடிக் கொண்டிருந்தாலோ அவர் கோட்ட செயலகத்தில் பிரகடனம் செய்திருக்க வேண்டும். பெற்றோரை இழந்தவர் கோட்ட செயலகத்திடமிருந்து பிரகடனப் படிவத்தை (ழுசுP 7) படிவத்தைப் பெற்று அதை சமாதான நீதிவான் சான்றளித்திருக்க வேண்டும். விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து சான்றளித்த பின் அது கோட்ட செயலகத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

 

குறிப்பு 4:

இந்த வயதிற்குண்டான பிரிவிற்குள் வரும் பெற்றோரை இழந்தவர்கள் தனித்தனியாக ஓய்வூதியத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். ஓய்வூதியம் பெற்றோரை இழந்தவர்களுக்கு சமமாக பங்கிட்டு தரப்படும்.

 

 

குறிப்பு 5:

கணவன்/மனைவியை இழந்தவர்கள் இரண்டாவது திருமணம் எனில் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளும் ஓய்வூதியத்தின் அவர்களுடைய பங்கிற்காக வேண்டுகோள் விடுவிக்கலாம். ஓய்வூதியம் பெற்றோரை இழந்தவர்களுக்கு சமமாக பங்கிட்டு தரப்படும்.

 

 

 

 

 

 

 

 

 


அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.



தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:33
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty